COVID 19ம் திருப்பூரும்….
உலகின் இரு பெரும் வல்லரசுகள் தங்களுடைய வல்லாதிக்கத்தை உலகெங்கும் நிறுவ கையிலெடுத்த விஞ்ஞான ஆயுதம் கோரோனா வைரஸ்.. என்கிற COVID
19..
பில்கேட்ஸ் இதைப்பற்றி மிகவும் முன்னதாகவே ஏன் பேசி வந்தார்? அவரது தொண்டு நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பழங்குடி இன மக்கள் மூலம் இந்த வைரஸ் சம்பந்தமான பல்வேறு ஆராய்ச்சிகளை ஏன் முன்னெடுத்தது?
சைனா கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களிலேயே கோடிக்கணக்கான முக கவசங்களை ஏன் தயாரிக்க ஆரம்பித்தது?
ஜெர்மனியின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான க்யூர்
வாக் (curevac).. நிறுவனத்திற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கும் ஏன் மோதல் ஏற்பட்டது?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்தால் என்னுடைய முதல் பேரா விற்கு விளக்கம் கிடைக்கும்.
இந்த இணைப்பை சொடுக்குங்கள். மேலதிக விபரங்களுக்கு..
Coronavirus: anger in Germany at report Trump seeking exclusive vaccine
deal…
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் ஆரம்பித்து வைத்தவனே அதை முடிக்க வேண்டும் என்பதும் நம் வாழ்வில் நாம் கண்கூடாக கண்டது… இந்த யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்களோ இல்லையோ அதைப் பார்ப்பதற்கு பாதி மனிதர்கள் கூட இருக்கமாட்டார்கள் என்பதைப் போன்ற அச்சம் பரவி இருக்கிறது..
நெம்புகோல் இல்லாமல் இந்த பூமிப் பந்தை கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயப் பிசாசு திருப்பிப் போட்டு விட்டது…
நேற்றைய பெரும் பணக்காரர்கள் நாளை சாதாரண மனிதர்களாகவும் இன்றைய சாதாரண மனிதன் நாளைய பிச்சைக்காரன் ஆகும் வாய்ப்புகள் அதிகம்..
என்னைபோன்று
வீட்டில் இருக்கும் மனிதன் வியந்து விட்டம் பார்த்து கொண்டிருக்கிறான்.
01.
எல்லாத் தொழில்களும் முடங்கிவிட்டன எப்போது விடியல் என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஒருநாள் நல்ல விடியல் விடிந்தால் அடுத்து என்ன செய்வது, நம் தொழில் எந்த திசையை நோக்கி பயணிக்கும் என்று தெரியாதபோது , நான் சார்ந்த ஆடை உற்பத்தியும் ஏற்றுமதியும் என்ன நிலைமைக்கு ஆளாகும் என்பதை ஆழ்ந்து யோசித்தபோது
பல்வேறு நிலைகள் தெரிகின்றன.
அவற்றை சுருங்க கூற விழைகிறேன்.
இது இன்று நாளை இது மாறலாம்.
கொரானா வைரஸ் என்று அழைக்கப்படுகிற COVID 19 பாதிப்பில் இருந்து மீண்டதிற்க்கு பின்னால் , நவ நாகரீக ஆயத்த
ஆடைகளும் அதன் சில்லறை விற்பனை மற்றும் அதனுடைய போக்கு ( Fashion
Direction and consumption ) இவைகள் எந்த திசையை நோக்கி பயணிக்கும் என்று உலகிலுள்ள அனைத்து தொழில் வல்லுனர்களும் தத்தம் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
அடுத்த சில வருடங்களுக்கு நாம் எப்படி ஆடை உடுத்த போகிறோம் என்பதைக்கூட இந்த கொரானா முடிவு செய்யும் போலிருக்கிறது.
மேலே
உள்ள படித்தில் உள்ளது போல் நீங்கள் ஒரு முகமூடியையும் ஒரு கை உறையையும் அணிய உந்தப்படலாம்,அவர்களால்..
பொதுவாகவே நவீன ஆடைகளை ஒவ்வொரு காலத்திற்கும், தட்பவெட்ப த்திற்கும், ஏன் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், தங்களுடைய செல்வச்செழிப்பை வெளிப்படுத்தும் விதமாக மனிதன் பாவித்து வந்தான். இந்த தொழிலுக்கு பின்னால் பல்லாயிரக்கணக்காண கோடி
முதலீடு செய்யப் பட்டு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் இதன் முதலாளிகளாக
உள்ளார்கள்.
உலகின் மிகப்பெரிய 10 பேஷன் ஹவுஸின் ப்ராண்டுகள் இவை.
வெர்சாஸ்…
ஃபெண்டி…அர்மானி..பர்பெரி,,ப்ராடா,,குச்சி,,
சானெல்,,ஹெர்மிஸ்…லூயிச்
விட்டன்…
மேலே
உள்ள லிங்கய் அழுத்தி அவர்களுடய வியாபரம் மற்றும் ப்ரண்டின் மதிப்பு ஆகியவற்றை தெரிந்து
கொள்ளுங்கள்
1)
இனி
இந்த கோரோனா என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
மிக அதிக விலை கொடுத்து ஆடைகள் வாங்கியது இனி குறையலாம்.
கோரோனா பாதிப்பிலிருந்து
மீண்டு விட்டதாக கருதப்படுகிற சைனாவில் புதிதாக கஸ்டமர்கள் அதிக பொருட்செலவில் நவநாகரீக ஆடைகளை வாங்க ஆரம்பிக்கவில்லை,
அல்லது தயங்குகிறார்கள்..
அத்தியாவசிய தேவைக்கான ஆடைகளை மட்டுமே அவர்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் போக்கு உலகம் முழுவதும் குறைந்தது இரண்டு வருடங்களாவது தொடறும் என்று நம்பப்படுகிறது..
பொதுமக்கள் இப்பொழுது தேவைக்காக மட்டுமே( பணத்தின் அருமையையும் பார்த்து) ஆடைகள் வாங்க தயாராகி விட்டார்கள் என்று பிரான்ஸ்ஸ்கா மஸ்தன் என்கிற பிரென்ச் டிசைனர் கூறுகிறார்
வருங்காலங்களில் கஸ்டமர்கள் ஒரு தனி தன்மையுடனும் நேர்த்தியாக தெரிவுசெய்யப்பட்ட துணி வகைகளை கொண்டதும், நீடித்து உழைப்பதும் ஆன ஆடைகளை வாங்க தொடங்குவார்கள்.
இதனால் உலகப்புகழ்பெற்ற பெரிய பிராண்ட் நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடும்.
மேக்சிமிலியானா நெகோலெல்லி(Maximiliano
Nicolelli) என்கிற இத்தாலியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனமும் வேறொரு கதை சொல்லுகிறது..
இனிமேல் பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் தகுந்தமாதிரி உடைகளை வாங்குவதை தவிர்த்து குறைந்தபட்சம் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே ஆடைகளை வாங்குவார்கள்.
மின் வணிகம்.. E Commerce..Online shopping..
தற்பொழுது இந்த ஆறு வார காலம் வீட்டிலேயே இருந்து நம்முடைய எல்லா தேவைகளுக்கும் கணினியையும் கைபேசியையும் பயன்படுத்தி பூர்த்தி செய்து கொண்டதால் இந்த பழக்கம் தொடரலாம். இதன் மூலம் பயனாளிகளுக்கு செலவு குறைவதோடு நேரமும் மிச்சமாகிறது.. இது ஆயத்த ஆடைகள் இருந்து உணவகங்கள் வரை
பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடி என்று சொல்லுகிற டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போக வேண்டிய அவசியமில்லாமல் வீட்டிற்கு பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பது பழக்கமாகிவிட்டது. இதன் மூலம்தேவைகளும்
குறையும்.பார்ப்பவை எல்லாம் வாங்கி குவிக்கும் பழக்கம் குறையும்..
இதனால் மிகப்பெரிய கடைகள் உள்ள வணிக வளாகங்களுக்கு ( Shopping Mall) பொதுமக்கள் வருவதும் குறையும்.. அதுவும் போக இந்த வைரஸ் மீண்டும் தாக்குகிற அபாயம் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு இருக்கலாம் என்கிற பயமும் மக்களை இந்தப் போக்கை நோக்கி உந்தித் தள்ளும். இதன் விளைவாக பல்வேறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படலாம். அதன்மூலம் அந்த வளாகங்களில் உள்ள
துணிக்கடைகள் கூட மூடப்படலாம்.இந்த போக்கு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது.
அதே
நேரத்தில் ,இது பெரிய பிராண்டுகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். காரணம், இதுவரை பயனாளர்களின் நேரடி தொடர்பில் இருந்த சில்லரை வியாபாரிகள்அனுபவித்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெரிய பிராண்ட் பெற முயற்சிக்கும்.. அவைகள் தங்களுடைய ஆன்லைன் வர்த்தகத்தை மேம்படுத்த முயற்சிக்கும்.
இந்தப் போட்டி எல்லா நிறுவனங்களுக்கும்
சரி சமமாக இருக்காது என்கிறார் பெர்னெஸ்டீன்..(Bernstein.)
இந்த
கருத்தை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கழக பேராசிரியர் சால்லி மைட்லிச்சும் ஆதரிக்கிறார்.. (Sally Maitlis, a professor of organisational behaviour at Oxford
University's Said Business School.)
பணபலம் மிக்க பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்த போட்டியில் நிலைக்கும்.காரணம் இதில் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டும்
செயற்க்கை
நுண்ணரிவு.( Artificial Intelligence)
மெய்
நிகர் ஆடை அறை..(Virtual Dressing room) போன்றவற்றிற்கு
மிக அதிக பணம் செலவு செய்ய வேண்டும்.
இதானாலும்
தேவை குறையும்..
ஆனால் விளையாட்டுத்துறையில் இருக்கிற நைக்கி, அடிடாஸ் போன்ற பிராண்ட்கள் இந்த பாதிப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும். அந்த வகை ஆடைகள் ஒரு சிறப்பான தன்மை கொண்டவை..
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடன் ஒவ்வொரு கடையிலும் உடனடியாக மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து உடைகளை வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு தவறு என்கிறார் கோட்லியார்..
(Kotlyar )..
3)
அடுத்தது என்ன?
ஏற்கனவே விற்காத, விற்க முடியாத ஆடைகளை கடைக்காரர்கள் மிகக் குறைந்த விலையில் விற்பதற்கு முயற்சி செய்வார்கள். அதனால் மிக பலத்த பொருளாதார இழப்பு ஏற்படும். இதன் பொருட்டு வாடகையும், பணியாள் சம்பளமும் ,வங்கிக்கு திருப்பித் தர வேண்டிய பணமும், வட்டியும் மற்றவையெல்லாம் கொடுக்க முடியாத சூழளில், காலம் அவர்களை மூளையில் அமர வைத்து விடும்..
புதிய ஆடைகளை வாங்குவதற்கு பணம் இருக்காது. இங்கு பணம் தான் மிகப் பிரதானமாக இருக்கும். பணப்பெட்டியை நிரப்பி வைத்திருக்கிற பெரிய கடைகள் மட்டுமே நிலைத்து நிற்கும்.
இதனுடய
தாக்கம் இப்போதே தென்படுகிறது..
ஆனால் அதே நேரத்தில் பாதி விலைக்கு ஆடைகளை தருகிற டிஸ்கவுண்ட் ஸ்டோர் என்று சொல்லப்படுகிற கடைகளை நோக்கி மக்கள் வேக வேகமாக நடை போடுவார்கள்.
4)
பழயன
கழிதலும் புதிய புகுதலும்..
மேலும் சுற்றுச்சூழலை நான் மிகவும் கெடுத்து விட்டோம் என்கிற கவலை நமக்குள்ளே பல வருடங்களாக இருப்பதாலும் அதன் விளைவாக பனிப்பாறைகள் உருகுதளும், அதிகளவு மழையும், மிக நீண்ட கோடை காலமும், கட்டுக்கடங்காத காட்டுத் தீயும் ,மனித குலத்தை பறவைகளை , விலங்குகளை கூட பாதித்திருக்கிறது
என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம்.. அதனால் இனி வருங்காலத்தில் ஒருமுறை அணிகிற ஆடைகளுக்கான ஏன் அதிக பொருளை செலவிட வேண்டும் என்கிற ஒரு கேள்வி நம் மனதில் எழுவதால்,மறு சுழற்சி, நிலை நிருத்தல்,(Recycle, reuse ,sustain)
போன்ற வார்த்தைகள் மிக அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்பை கொண்டிருக்கிற ஆடைகளும் ஏற்கனவே பயன்படுத்திய ஆடைகள் இருந்தும் தண்ணீர் போத்தல் களிலிருந்தும் மறுசுழற்சி மூலம் பெறப்பட்ட நூல் இழைகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் அதிகமாக விற்பனைக்கு வரும் ..
பருத்தி ஆடைகள் அணிவது குறையலாம். காரணம் அவை விலை அதிகம் என்பதும் ஒரே ஒரு ஆடை தயாரிக்க பல நூறு லிட்டர் தண்ணீர் தேவை என்பதும் சாயம் இடுவதற்கு பயன்படுத்துகிற சாயப் பொருட்கள் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகின்றன
என்பதும் காரணம் ஆக்கப்படுகின்றன.இது
ஆடைகள் தயரிப்பை மட்டுப்படுத்தும்..
5)
தயாரிப்பாளர் என்னுடைய நிலை என்ன மாதிரி இருக்கும்?
இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%
GDP பங்களிப்பை தருகிறார்கள். மேலும் சற்றேறக்குறைய 8 கோடி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள்.
இந்தியாவினுடைய வெளிநாட்டு மூலதனத்தில் ஒரு சதவீதம் இந்த தொழில் இந்தத் தொழிலில் மூலதனம் செய்யப்பட்டிருக்கிறது.
மீண்டும் சகஜ நிலைமைக்கு இந்தியா திரும்பிய பின்னர் மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால் விலை குறைவதற்கு வாய்ப்புண்டு. முதல் காரணம் நம்மிடமிருந்து இறக்குமதி செய்கிற இறக்குமதியாளர்கள்
முன்பு தந்த்தை போல் அதிக அளவும் தரமாட்டார்கள். அதிக லாபம் தர மாட்டார்கள். ஆகவே தயாரிப்பாளர்கள் மூலதனம் பொருட்களை வாங்குவது குறையும் அதுபோக 100 சதவீத பருத்தி ஆடைகள் உபயோகிப்பதும் குறையும் எனவே மூலப் பொருள்களின் விலை குறையும.
ஆனால்
இது என்னை உயர்த்தாது..
இறக்குமதி செய்கிற செயற்கை இலை பாலியஸ்டர் பைபர் விலை அதிகரிக்கும். இதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இந்திய அரசின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டதால்
விலை குறைய வாய்ப்பில்லை. மேலும் சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற செயற்கை இழை தொழிற்சாலைகள் இன்னும் சரிவர இயங்க ஆரம்பிக்காததால் விலை ஏறுவதற்கு வாய்ப்புண்டு..
இன்றைய நிலவரப்படி இந்த தொழிலில் 30 சதவீதத்துக்கு மேல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்வதால் அவர்கள் உடனடியாக பணிக்கு வர வாய்ப்பில்லை . இங்கு தங்கி உள்ளவர்களூம் நிலைமை சரியானபின் தங்கள் ஊரை நோக்கி
செல்ல வாய்ப்புகள் அதிகமே தவிர, இங்கு நிலைக்க மாட்டார்கள். உற்பத்தி குறையும்..
கடந்த சில வருடங்களாகவே இந்த தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.. குறிப்பாக வங்கிக்கடன் பெறுவதில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தீர்வைகளை( GST, Duties Paid). திரும்ப பெறுவதில் ,மிக அதிக வட்டி சுமை , எல்லாவற்றிலும் கூடுதலாக உற்பத்தி செலவு மிக அதிகமாக இருப்பது, மற்ற நாடுகளில் இருப்பதைப் போல நிகர உற்பத்தி குறைவாக இருப்பது
(Production per machine per
person ) போன்றவை.
மேற்சொன்ன எல்லா காரணங்களும் உள்நாட்டு ஆடை உற்பத்தி அனைவருக்கும் பொருந்தும்
இந்த பாதிப்பு திருப்பூர் சேலம் ஈரோடு நகரங்களுக்கு அதிகம் இருந்தாலும் கரூரில் மட்டும் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புண்டு காரணம் அங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் ஒரு அத்தியாவசிய பொருட்கள் என்பது ஆகும்.
இந்தக் காரணங்களினால் அடுத்த ஒரு வருடத்திற்கு குறைந்தது 20 முதல் 25% உற்பத்தி குறையும்.இதிலிறுந்து
மீள ???
பெரிய நிறுவனங்கள் திவாலாக கூடிய வாய்ப்பும் அதனால் அதன் சார்பு நிறுவனங்கள் நொடிந்து வருகிற வாய்ப்பும் நன்றாகவே தெரிகிறது இந்தியா சற்றேறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு உடையது இதில் ஏற்றுமதியும் உள்நாட்டு வியாபாரமும் அடங்கும்.
ஏற்கனவே தயாரித்து அனுப்பிய சரக்கு கணக்கு பணம் வருவது தடைபடலாம். அல்லது காலம் தாழ்த்தி வரலாம்.. அல்லது வராமலும் போகலாம்.
திருப்பூரின் 10000 தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன.
அதை நம்பியிருந்த 10 லட்சம் பேர் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்
திருப்பூரின் பெரிய பிரபலமான பல்வேறு ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு திக்குத் தெரியாமல் அல்லாடி வருகிறார்கள். இதில் ஏற்கனவே நிகழ்வுற்ற ஒரு மரணமும் அடங்கும்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
ஒரு வித்தியாசமான வியாபார தந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள்.. அது எதிர்மறையான விளைவை தற்போது தரப்போகிறது..இனியாவது திருந்த வேண்டும்..
மாதம் 2500 கோடி ரூபாய் வியாபாரம் செய்கிற ஊருக்கு 2 மாதம் விற்பனை செய்த சரக்கு பணம் வரவில்லை என்றால் அவர்கள் நிலை என்ன அடுத்து மூன்று மாதங்களுக்கு வியாபாரமே இல்லை என்றால் அவர்கள் முதலீடு என்னாவது?
இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் திருப்பூரின் நிலை உங்களுக்கு தெளிவாகும்..
கோடைகால வியாபாரம் 60 லிருந்து 70 சதவீதம் திருப்பூரில் நடக்கும். கொரோனா
இந்த கோடைகால வியாபாரத்தை அப்படியே நிறுத்திவிட்டது. தயாரித்த ஆடைகள் நிறுவனங்களிலும்,
வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்ட பெட்டிகள் கப்பல்களிலும் ,கப்பலிலிருந்து இறக்கப்பட்ட பெட்டிகள் அந்தந்த துறைமுகங்களிலும் அப்படியே நிற்கின்றன.. இவர்களின் சோகத்தை சுமந்தபடி..
இந்த பாதிப்பு இந்தியாவை விட வங்காளதேசம் வியட்நாம் விடும் கம்போடியாவிலும் அதிகம் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள்
சொல்லுகிறார்கள்..
இந்த ஆயத்த ஆடை வியாபாரம் ஏதோ உங்களுக்கும் ஆடைக்கும் உள்ள தொடர்பு மட்டுமே என்றோ அல்லது தயாரிப்பாளருக்கும் இறக்குமதியாளர்கள்
உள்ள தொடர்பு என்றோ நல்லது 2 நாடுகளுக்குள் உள்ள வியாபார ஒப்பந்தத்தின் பலன் என்றோ நீங்கள் நம்பி இருந்தால் இப்பொழுது அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் விட பெரிது கண்ணுக்குத் தெரியாத கோரோனா.
இதை
அமெரிக்க நிறுவனங்கள் Gods act என்று சொல்லுவார்கள்.
An act of God describes an
event outside of human control or activity. ... Contractual language referring
to acts of God are known as force majeure clauses,
which are often used by insurance companies. These clauses typically
limit or remove liability for damages, and losses caused by acts of
God..
கொஞ்சம் பெருமூச்சு விடுங்கள். அமெரிக்காவில் மட்டும் 7 லட்சம் ஆடை விற்பனையகங்கள் மூடப்பட்டுவிட்டன இந்த மூன்று மாதத்தில் நானூத்தி முப்பது பில்லியன் டாலர் இந்திய ரூபாயில் 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.ஐரோப்பாவில்
இதே அளவு இருக்கக்கூடும்.
உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2% என்பதால் நீங்கள் உள்ளே இழுத்த மூச்சை நிதானமாய் வெளியில் விட்டுவிடுங்கள்
ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்களான ஜேசிபென்னி ஜே குரு அசினா போன்றவை திருப்பூரில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இதிலிருந்து மீள்வதற்குள்
மேலும் மேலும் பல்வேறு அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களும் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்
இந்தத் தாக்குதலில் இருந்து மீண்டும் அதற்குப்பின்னால் பல்வேறு ஐரோப்பிய கம்பெனிகள் தங்களுடைய உற்பத்தி தொழிற்சாலைகளை ஐரோப்பாவிற்கு உள்ளேயே நிறுவ முடிவெடுத்து இருக்கின்றன இதுவும் திருப்பூருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தலாம்
6)
அரசு
என்ன செய்ய வேண்டும் ?
இதன் தாக்கத்திலிருந்து
இந்த தொழிலை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அரசும் தன்னுடைய அதிகபட்ச உதவிகளை அளிக்க வேண்டும்.. அவை மதிப்புக்கூட்டு வரியிலிருந்து இந்த தொழிலை ஒரு வருடத்திற்கு விலக்கி வைத்தல்..
ஒரு வருடத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கி வைத்தல்
தாராளமான வங்கிக்கடன்
வங்கி கடனுக்கான வட்டியை குறைத்தல் .
ஏற்கனவே பாதிப்பிற்குள்ளான
நிறுவனங்களுக்கு தோளோடு தோள் நின்று அவர்களை மேல்நோக்கி தூக்கிவிட முயற்சிக்க வேண்டும்.
இணைப்புகள்..உங்களின்
பார்வைக்கு.
BBC Report about Asian
garment factories future..
PENNSYLVANIA
- A new report lists the fashion brands which have reportedly cancelled or
postponed the most orders from suppliers in Bangladesh where more than a
million garment workers have now lost their jobs because of the coronavirus pandemic.
Primark
has cancelled or delayed by far the most orders, with a total of US$273
million, followed by C&A (US$166m) and Inditex/Zara (US$109m), according to
the report by the Centre for Global Workers' Rights, part of Penn State
University's College of the Liberal Arts.
Mothercare
(with US$62m of cancelled or delayed orders), Bestseller (US$59m), Kiabi
(US$57m), VF Corp (US$56m), Tesco (US$50m), M&S (US$39m), Kohls (US$39m),
Walmart (US$38m), LPP (US$37m), Target (US$24m), and J C Penney (US$23m) are also
listed.
Lindex Sweden files for bankruptcy with 5000 employees all
around the world. Has 500 stores in 18 countries..Turkey, China,
Bangladesh,Portugal,Italy,Myanmar, Cambodia,Tirupur .3 Parties in to loose 150 Cr.
One single exporter has
employed more than 3000 employees for this company alone.
UK store with 500 stores in UK and Ireland.50
factories are working in India
I don't know who wrote this,
but very beautiful message ..
We fell asleep in one world,
and woke up in another.
Suddenly Disney is out of
magic,
Paris is no longer romantic,
New York doesn't stand up
anymore,
Chinese wall is no longer a
fortress, and Mecca is empty.
Hugs & kisses suddenly
become weapons,
and not visiting parents
& friends becomes an act of love.
Suddenly you realise that
power, beauty & money are worthless,
and can't get you the oxygen
you're fighting for.
The world continues its life
and it is beautiful.
It only puts humans in cages.
The Mother earth says:
"You are not necessary.
The air, earth, water and sky
without you are fine.
When you come back, remember
that you are my guests.
Not my masters.
Yuvraj Sampath…
17.04.2020