திருப்பூர் இப்போது எதை நோக்கி பயணிக்க வேண்டும்?
யுவராஜ் சம்பத்..21.06.2020
------------------
நீங்கள் பொழுது போக்கவோ அல்லது பொருள் ஈட்டவோ வரலாற்றின்
பக்கங்களை புரட்டுபவராக இருந்தால், நீங்கள்
கட்டாயம் ஒரு விஷயத்தை உள் வாங்கி இருக்க முடியும்.
அது எந்த ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு புதிய
தொழில்நுட்பம் அல்லது ஒரு புதிய விற்பனைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் .இதற்கு
ஒரு சிறந்த உதாரணம் 1930 இல் கிரேட் டிப்ரஷன் என சொல்லப்படுகிற உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு
பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்தான் xerox photocopier.Face book,
LinkedIn, Google போன்றவையும் அப்படி கண்டுபிடிக்கப்பட்டவையே.அதேபோல இன்னும் பத்து
இருபது வருடங்களுக்கு பின்னர் உலக அளவில் மிகப் பிரபலமாக பேசப்படும் என்று நம்பப்பட்ட
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ( AI)மற்றும் இல்லத்தில் இருந்தபடியே அலுவலகப் பணி (WFH) இந்த
இரண்டையும் இன்றைக்கு மிக எளிதாக சாத்தியப்படுத்தி இருக்கிறது covid-19,கொரோனா வைரஸ்..
திருப்பூர் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற கட்டுரையின்
தலைப்புக்கு பின்னால் இவைகளுக்கு என்ன வேலை என்று எண்ணுகிறவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
Covid-19 க்கு இன்றுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. மருந்து
மாத்திரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதிதர்மர் வந்தால்தான் இதை சரிப்படுத்த முடியும்
,ஆகவே தங்கை ஜோதிகா உங்கள் வீட்டுக்காரரை கொஞ்சம் அனுப்புங்கள் என்று ஒரு ட்விட்டரில்
ஜோக் அடிக்கிர சமூகம் ,அப்படி எளிதாக எள்ளி நகையாடி இதை புறந்தள்ளிவிட முடியுமா? முடியாது.
இந்த நோய் உலகளவில் பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளது.இதிலிருந்து
மீள்வது மிகக்கடினம் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த உண்மை.
இந்தப் பொருளாதார சரிவிலிருந்து நம்மை, நம் தொழிலை எப்படி
காப்பாற்றப் போகிறோம்?. மீண்டும் புதிய தொடக்கத்தை எப்படி சந்திக்கப் போகிறோம்?. அப்படி
சந்திக்கிற போது என்னென்ன விஷயங்களை தடங்கல்களை எதிர்கொள்ளப் போகிறோம்?. இதிலிருந்து
மீண்டு வெற்றி பெற வேண்டுமென்றால் கட்டாயம் நமக்கு ஒரு மாற்றுச் சிந்தனை இருந்தாகவேண்டும்.
அந்த மாற்று சிந்தனை என்ன என்பதைப்பற்றி அகில உலகமும் யோசித்துக் கொண்டே இருக்கிறது.தங்களது
துறை சார்ந்த விஷயங்களில் எப்படி எல்லாம் புதுமைகளைப் புகுத்த முடியும் என்று அரசுடனும்
மற்றுமுள்ள விஞ்ஞானிகள் உடனும் அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அலிபாபாவின்
நிறுவனர் ஜாக் மா அடுத்த இரண்டு வருடங்களில்
தொழில்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டாலே மிகப்பெரிய வெற்றியை அடைந்ததாக பொருள்படும்
என்றார்..இது உண்மைதான் என்பது மாதிரி தெரிகிறது. அதனால் எதை நோக்கி திருப்பூர் செல்ல
வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் மையப்புள்ளி.
இதுவரை திருப்பூர்
எழுபதுகளின் தொடக்கம் திருப்பூர் ஏற்றுமதியை நோக்கி தன் பார்வையை
திருப்பியது. அதுவரை இந்திய மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்த நிறுவனங்கள் மற்றும்
சிறு சிறு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். அன்று முதல்
சற்றேறக்குறைய நாற்பதாண்டு காலம் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு தனி முத்திரையைப் பதித்து,
திருப்பூர், ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 சதவீத வளர்ச்சியை எட்டி, இன்றைக்கு
30,000 கோடி ரூபாய் இலக்கை எட்டியிருக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதியில்
எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை.இதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியாவிலிருந்து
இறக்குமதி செய்யப்படுகிற பருத்தி ஆடைகள் மீதான இறக்குமதி வரி விலக்கு ஒரு சில நாடுகளில்
நீக்கப்பட்டது முக்கியமான காரணம். இந்தியா ஒரு முன்னேறிய நாடாக மாறியதால் அந்த வரி
விலக்கு நீக்கப்பட்டது.. அதேநேரம் வங்காளதேசத்தில் உற்பத்தி செலவு குறைவு. அரசின் ஊக்குவிப்பு
திட்டங்கள் அதிகம். அங்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்கத்தீர்வை விலக்கு
போன்ற சாதகமான காரணிகள் வங்காளதேசத்தை முன் நிறுத்தின. இதனால் இன்று உலகின் இரண்டாவது
மிகப்பெரிய ஏற்றுமதியாளராக வங்காளதேசம் உயர்ந்துள்ளது .அதேநேரம் வியட்நாம் கம்போடியா
பர்மா போன்ற புதிய புதிய நாடுகள் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவின் உதவியுடன் வளர்ந்து
வருகின்றன. இதுவும் திருப்பூரை பாதித்திருக்கிறது . எல்லாவற்றுக்கும் மேலாக பருத்தி
ஆடைகளின் விலையும் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதார நிலையும் சரிவர பொருந்தி
வராத காரணத்தினால், பருத்தி ஆடையின் சர்வதேச மார்க்கெட் குறைந்துள்ளது. திருப்பூர்
தன்னை அதற்கு ஏதுவாக செயற்கை இழை ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்திக்
கொள்ளவில்லை. ஆகவே இன்றைய திருப்பூருக்கு இந்த கொறோனா வைரஸ் வரப்பிரசாதமாக மாறுமா அல்லது சாபம் ஆக முடியுமா
என்பது திருப்பூர் எந்த திசையை நோக்கி இனிமேல் பயணிக்க போகிறது என்பதை பொறுத்து அமையும்.அந்த
புதிய முயற்சியின் பின்னால் புடைந்திருக்கும்
பொருளாதாரப் பொக்கிஷம் என்ன என்பதைப் பற்றிக்கூட திருப்பூர் இன்னும் சிந்திக்க
ஆரம்பிக்க வில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
அதிகமாக பத்திரிக்கை படிப்பவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில்
ஒரு மீம்ஸ் பார்த்திருக்கக்கூடும் ஒருவர் தன் உடம்பு மட்டுமல்லாமல் தன்னுடைய இரு சக்கர
வாகனத்திற்கும் சேர்த்து 20 கிலோ மஞ்சளை அப்பிக்கொண்டு வண்டி ஓடிக் கொண்டிருப்பதும்,
முக கவசத்திற்க்கு பதிலாக ஒரு கொத்து வேப்பிலையை முகத்துக்கு நேராக கட்டிக்கொண்டு வண்டி
ஓட்டிக் கொண்டிருப்பதும், ஈரோடு மாவட்டம் முழுவதும்
பல கிராமங்களில் மஞ்சள் வேப்பிலை கலந்த தண்ணீரை லாரிகள் தங்கள் ஊருக்கு வெளியே உள்ளேயும்
தெளித்துக் கொண்டிருப்பதயும் புகைப்படங்களாக பார்த்திருப்பீர்கள்.
இது ஒன்றும் எள்ளி
நகைக்கிற விஷயம் அல்ல. இதற்கு பின்னால் பல்லாயிரக்கணக்கான
வருட தமிழனின் தொன்மையான இயற்கை மற்றும் சூழல் பற்றிய அறிவு இருக்கிறது. அதை இந்த
covid-19 காலத்தில் மிகவும் எளிதாக நாம் கையாண்டு பணம் பண்ணியிருக்க முடியும். இந்த நோய்க்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய ஆடைகளை
,முக கவசங்களை, கையுறைகளை தயாரித்து இருக்க
முடியும்.அதை விற்று பெறும் பொருள் ஈட்டி இருக்க முடியும். ஆனால் ஏன் பின் தங்கினோம்.
யோசிப்போமா??
அதேபோலவே கடந்த பத்து வருடங்களாகவே, உங்கள் வீட்டில் குடிநீரை
செம்பு பாத்திரத்தில் வைத்து குடியுங்கள். செம்பு பாத்திரம் இயற்கையான கிருமிநாசினி,
என்றெல்லாம் பரப்புரை செய்யப்பட்டு செம்பு பாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் விற்பனையானது.
அதுவும் ஒரு திராவிட விஞ்ஞானம். திராவிட அறிவு. ஆனால் இதை கற்றறிந்த ஒரு சிறிய கூட்டம், ஏதோ பொய்யைச் சொல்லி ,கங்கையிலே
ஓடுகிற கழிவுநீரை ஒரு செம்பு பாத்திரத்தில், அடைத்து கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்டு
, கேள்வியோடு மூடநம்பிக்கையும் உங்கள் மனதில் பதித்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் தானே?
ஊண்மையில் செம்பு ஒரு இயற்கையான கிருமி நாசினி. அந்த காலத்து அகத்தியர் முதல் இன்றைக்கு சென்னையில்
வசிக்கும் அகஸ்தீஸ்வரன் வரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
பழம்பெருமை பேசி, நாம்தான் அதை இந்த உலகத்துக்கு
எடுத்து சொன்னோம் என்று உரக்க கூவி, மூலையில் முடங்கி விட்டோம்.
ஆனால் இஸ்ரேலியர்களும்,
இன்றைக்கு கொரோனாவல் அதிகமாக பாதிக்கப்பட்ட இத்தாலியர்களும் அதோடு நின்றுவிடவில்லை.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு,
காப்பர் நானோ துகள்களை
கொண்டு நூல் நெய்து, அதில் முகக்கவசம் தயாரித்து, covid-19 எதிர்க்கக்கூடிய அல்லது
தடுத்து நிறுத்தக்கூடிய காப்பர் முகக் கவசங்கள் என்று பெயரிட்டு, ஒரு முகக் கவசத்தை
சற்றேறக்குறைய 25 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பு 1800 ரூபாய்க்கு) முன்பதிவு
செய்தவர்களுக்கு மட்டுமே விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குர்தா செட் சற்றேறக்குறைய 50 அமெரிக்க டாலர்களுக்கு
(இந்திய ரூபாய் மதிப்பு 3600 ரூபாய்க்கு) விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த தொழில்நுட்பத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கையில்
வைத்திருந்த நாம் ஏன் தவற விட்டோம்?யோசிப்போமா??
இந்த சுட்டியை சொடுக்குங்கள்..
https://kuhncoppersolutions.org/product/well-mask/
https://www.copperclothing.com/
இந்தக் கேள்விக்கு நீங்கள் விடை கண்டுபிடிக்க முயற்சித்தால்,நீங்கள்
இந்தியாவில் தான் கல்விக்காக செலவிடப்படும் தொகை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது என்பதும்,
நம் கல்வி முறை
இன்றளவும் அகில உலக அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப அடிமைகளை
மென் பொறியாளர்கள் என்கிற பெயரில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தேசம் தான் என்பதுவும்
புரியும்.
இந்தியாவில் கல்வியாளர்களுக்கும்,
விஞ்ஞானிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் இடையில் ஒரு பந்தத்தை, புரிந்துணர்வை, கூட்டு
முயற்சியை உருவாக்கத் தவறி விட்டோம் என்பதுவும் புரியும்.
இது இந்திய ஜவுளித் துறையில் ஈடுபட்டு இருக்கிற பெருநிறுவனங்களின்
தோல்வியா, அல்லது இந்த அரசின் கல்விக்கொள்கையின் தோல்வியா என்று கண்டுபிடிப்பதற்கு
நாம் தயாராக இல்லை.ஆனால்??
அதைப்போலவே தோல்
பொருட்கள் அனைத்தும் மாட்டுத் தோளில் இருந்தும், எறுமைத்தோளில் இருந்தும் உருவாக்கப்படுகிறது
என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்.
வெஜிடேரியன் தோல்
செய்ய முடியுமா என்று ஏன் சிந்திக்கவில்லை? முடியும் என்பது தானே நிதர்சனம்? முடியும்
என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் கேரளாவில். சுஸ்மித் சீ சுசீலன் மற்றும் அவரின் குழுவினர்.அவர்கள்
எதில் தயாரிக்கிறார்கள் தெரியுமா? நாம் தினசரி பயன்படுத்துகிற தேங்காயிலிருந்து. எப்படி என்பது விஞ்ஞானம் ?எப்படி
சாத்தியப்படுத்தி இருக்கிறோம் என்பது வியாபாரம்? கடந்த மூன்று வருடங்களாகவே வெஜிடேரியன்
தோல் தயாரிக்கப்பட்டு உலகின் மிகச்சிறந்த கடைகளில் பெண்களின் கைப்பை, ஆண்களின் காலணி
போன்றவை தயாரித்து மிக அதிக விலைக்கு விற்க்கப்படுகிறது.
எனக்கும் உங்களுக்கும் இது தெரியாதது ஆச்சரியம் ஆச்சரியமல்ல
அறியாமை..
சொடுக்குங்கள்..
https://www.architecturaldigest.in/content/malai-a-sustainable-vegan-alternative-to-leather/#:~:text=Malai%2C%20a%20company%20based%20in,%2C%20durable%2C%20bio%2Dcomposite%20material&text=Leather%20has%20been%20used%20extensively,especially%20in%20the%20fashion%20industry.
இதைவிடவும் மிக முக்கியமான ஒரு புதிய கண்டுபிடிப்பு கிராஃபைட்
ஃபைபர். நானோ துகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி
இவற்றை இங்கிலாந்தில் தயாரிக்கிரார்கள். இந்த ஆடைக்கு 100 வருட காலமாக ஆயுள்
உண்டு என்று உறுதியளித்து ஒரு டீ ஷர்ட்டை
5000 ரூபாய்க்கும், ஒரு ஜாக்கட்டை 52000 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையும் நமக்கு இந்த கொரோனா காலத்தில் தான்
தெரிய வருகிறது. அணுவைப் பிளந்து ஆழ் கடலை புகுத்தி... இதான் நானோ டெக்னாலஜி...
சொடுக்குங்கள்.
https://shopgrapheneplus.com/
https://www.vollebak.com/product/graphene-jacket-1/
நாம் இப்போது எதை நோக்கி போக வேண்டும் தெரிகிறதா? கொஞ்சம்
அசந்தால் இன்றைக்கு இந்திய அளவில் மிக அதிகமாக பேசப்படுகிற மாட்டு மூத்திரத்டை கூட
அமெரிக்காகாரன் பேட்டன் பதிவு செய்துவிட்டு என்னை கேட்காமல் யாரும் மாட்டு மூத்திரத்தை
அருந்தக்கூடாது என்று சொல்லும் காலம் வரலாம். உண்டா இல்லயா?
ஆடுத்த தலைமுறை இளைஞர்கள் பல்வேறு வெளிநாடுகளில் சென்று படித்து
வந்திருந்தாலும் கூட, இந்தமாதிரியான புதுப்புது முயற்சிகளை எடுப்பதற்கு தயங்குகிறார்கள்
அல்லது அவர்களை ஊக்குவிப்பதற்கு பெற்றோர் தடையாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக
கண்ட உண்மை.இப்போதெல்லாம்,பாரதியின் இந்த வரிகள்
அடிக்கடி என்னை கேள்வி கேட்கிறது...உங்களையுமா?
ஊக்கமும் உள்வலியும் உண்மைப்பற்றும் இல்லாத மாக்களுக்கோர்கணமும்
வாழத்தகுதியுண்டோ?
நாம் எங்கு தவறு செய்கிறோம்? முயற்சி எடுக்க நம்மைத் தடுப்பது எது ?இன்றைக்கு
விரல்நுனியில் தரவுகள் இணய தளத்தில் பரவிக்கிடக்கின்றன. அதைக்கூட பார்க்க முடியாத அளவுக்கு
நம்மை வைத்திருப்பது எது?அதற்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் நம்மைத் தடுப்பது எது? முயற்சியின்மையா, அது நம்மால் முடியாது என்ற தாழ்வு
மனப்பான்மையா? இரண்டும் இல்லை .நம்மால் இதை சந்தைப்படுத்த முடியாது என்கிற இயலாமையா?
உங்களை மடை மாற்ற ஒரு கவிதை.........
சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாது தான்.
என்றாலும்,
எந்தப் பறவையும்
மழை பெய்ய வேண்டாம்
என்று மன்றாடுவதில்லை......
மரத்தின் கிளையில்
கூடுகட்டும் பறவைக்கு
அடிக்கிற காற்றின் மீது அச்சம் இல்லை.
காரணம்,
பறவை,
கிளையை நம்பி
வாழவில்லை,
தன் சிறகை நம்பி
வாழ்கிறது.......
இருட்டு வந்தால் என்ன
விடியாமலா போய்விடும்
என்பதை வார்த்தையாக அல்ல
வாழ்க்கையாக நினைத்தவர்கள்
முன்னேறுகிறார்கள்....
எப்படியாவது
பிழைத்திருக்க வேண்டும் என்பது பிழை.
இப்படித்தான் வாழ்வேன் என்பதே சரி,
பிழைத்திருந்தால்
போதுமா?
தலைமுறை தாண்டியும்
நிலைத்திருக்க வேண்டுமா?
அவரவர் வாழ்க்கைதான்
அவரவரை
அடையாளம் காட்டும்.
-----------------------
எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்குப்பின்னும் அதை பற்றிய விஞ்ஞான
அறிவை ஆவணப்படுத்தி இருக்க வேண்டும்.இந்த ஆவணப்படுத்துதல் பெரிய கல்வி நிறுவனங்களாலும்
, ஆராய்ச்சி நிறுவனங்களாலும்
மட்டுமே சாத்தியப்படும். அதன் தொடர்ச்சியாக அந்தப் பொருளை
உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஒரு தொழில் நிறுவனம் முன்வரும்.அந்தத் தொழில் நிறுவனத்துக்கும்
ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் ஒரு சந்தைப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும்.சில
நேரங்களில் அந்த ஆராய்ச்சிக்கு உண்டான செலவை
அந்த நிறுவனமே முன்கூட்டியே வழங்கிவிடும். இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை நைக்கி
Nike நிறுவனத்தினர் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.
அதுதான் தண்ணீர் இல்லாமல் செயற்கை நூல் இழையை சாயம் ஏற்றுவது. இதை கண்டு பிடித்தது
ஹாலந்தில் உள்ள ஒரு நிறுவனம். இதற்குண்டான இயந்திரங்களை செய்வது தைவானில் உள்ள ஒரு
நிறுவனம்.
சில நேரங்களில் அரசும் தன் முனைப்பாக இந்த மாதிரி கண்டுபிடிப்புகளில்
பெரும் தொகையை செலவிடும். உதாரணத்திற்கு மைசூரிலுள்ள சி எஃப் டி ஆர் ஐ CFTRI உணவு சம்பந்தப்பட்ட
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை
பல்வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்போலவே மத்திய பாதுகாப்பு துறையும்
பல்வேறு கண்டுபிடிப்புகளை விற்று வருகிறது. ஆனால் மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் இத்தகைய
முன்னெடுப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன்வைப்பது எனக்கு
நியாயமாகப் படுகிறது. இன்றைக்கு உலகின் மிகப் பெரும் பணக்காரராக இருக்கிற அம்பானி குழும
நிறுவனம் தன் தொழிலை ஆரம்பித்தது விமல் ஆடைகள் மூலமாகத்தான். ஆனால் அதற்குப் பின்னர்
அவர்கள் ஆடைகள் மட்டுமல்ல வேறு எந்தத் துறையிலும் இம்மாதிரியான முன்னெடுப்புகளை செய்வதற்கு
பெரும் தொகை செலவிட்டதாக தரவுகள் இல்லை . ஏன் என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள
முடியுமா என்று பாருங்கள்.அரசும் தன் பங்களிப்பை சரிவர செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
நாட்டின் மொத்த வருமானத்தில் மிகக் குறைந்த அளவே கல்விக்காக செலவிடுகிறது இந்த அரசு
என்பது பல்வேறு தரவுகள் மூலம் நமக்குத் தெரிகிறது. ஆனால் விதிவிலக்காக,சென்னையில் உள்ள
ஐஐஐடி போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கின்றன. இது மகிழ்ச்சியான
விஷயம் தான்.
அதேபோலவே இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை
பற்றி மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக காற்றும், நீர் நிலைகளும் மாசுபடுதல்.
இந்த மாசுபடுதலை குறைக்க ஒரு மிகப்பெரிய இயக்கம் உலகம் முழுவதும்
இயங்கி வருகிறது. அந்த இயக்கம் மறுசுழற்சி (Recycle) குறைந்தபட்ச மாசு ஏற்படுத்துதல்
( Reduce) ஒருமுறை அணிந்த ஆடைகளை மீண்டும் திரும்ப அணிந்துகொள்ளுதல் ( Re Use) விலங்குகளுக்கும்
இயற்கை வளங்களுக்கும் ஏற்படுகிற மாசைக் குறைத்தல் போன்றவற்றுக்காக பெரும் பணம் செலவு
செய்கின்றனர்.
அதன்மூலம் இப்பொழுது க்ற்றாழை நார் ஆடைகள், வாழைத்தண்டு நார்
ஆடைகள், சணல் இழை ஆடைகள் போன்றவை சிறிது முக்கியத்துவம் பெறுகின்றன. சணல் தவிர மற்ற
இரண்டின் மூலப்பொருட்களும்
நம் அருகில் இலவசமாகவே
கிடைக்கிறது. ஆனால் அதை எடுத்து அவற்றை ஆடைகளாக மாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள்
நம்மிடம் இல்லை என்பது, பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லப்படுகிற
கருத்து. ஆனாலும் திருப்பூர் தொழில் துறையினர் இதனை முன்னெடுக்க வில்லை காரணம் என்னவாக
இருக்கும்?
திருப்பூரைச் சுற்றி
பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு, வாழை இலையும், வாழைப்பழமும்
விற்பனைப் பொருளாக அனுப்பப்பட்டு, வாழைத்தண்டு மாடுகளுக்கு தீவனமாக போடப்படுகிறது.
அரசு இந்தத் துறையில்
தாராளமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் .அந்த முதலீட்டின் மூலம் பல்வேறு புதிய
தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும்
நிகழ்த்த முடியும். சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு மிகப்பெரிய தொகையை செலவு செய்ய
நிறுவனங்கள் அப்போதுதான் தயாராகும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களையும் ஆட்டோமேஷன்
என்று சொல்லுகிற தானியங்கல் தொழில்நுட்பங்களையும் இந்த துறையில் புகுத்த வேண்டும்,
அப்படி புகுத்தும் பொழுது வியட்நாம், பங்களாதேஷ்
போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் போட்டியிட முடியும் . அந்தப்
போட்டியின் மூலம் தான் பெரும் பொருள் ஈட்ட முடியும் .
அதே நேரத்தில் இந்திய
ஆடை உற்பத்தியாளர்கள் பொதுவாகவே தங்களுக்கு என்று ஒரு சொந்த பிராண்ட் இல்லாததனால் மேற்கண்ட
நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை.இதனால்தான் இறக்குமதியாளர்களின்
தயவில் வாழ்கிற நிலை என்பது இன்னும் திருபூருக்கு புரியவில்லை. புதிய புதிய பிராண்டுகள்
ஆன லுலுமென் lulumon போன்றவை புதிய தொழில்நுட்பத்தை செயல் ஆக்கியதன் மூலம் குறைந்த
காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக
மாறியிருப்பதை கண்டு நான் வியப்படயவில்லை.
புதிய தொழில்நுட்பங்கள் ஆயத்த ஆடைகளின் ஒவ்வொரு பிரிவிற்கும்
எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனித்தால், விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட
ஆடைகளை புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கும் போது அவை அந்த விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பையும் ஒரு தன்னம்பிக்கையும்
கொடுக்கும் .அந்த தன்னம்பிக்கை வெற்றியை அவனுக்கு கொடுக்கும்.அது ப்ராண்டை தூக்கி பிடிக்கும்..Nike,
Adidas போன்றவை அப்படி உருவானவைதான்.
What is Nike AeroAdapt?
https://news.nike.com/news/nike-aeroadapt-material-innovation
மேல் உள்ள லிங்கை அழுத்துங்கள்.
ஹாக்கி ஃபுட்பால் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்போது பார்த்தீர்களானால்,
அந்த வீரர்கள் உடலில் இருந்து வெளியே வருகிற வியர்வையில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை
பிழிவதை பார்த்திருப்பீர்கள் .அந்த அளவு வியர்வை
வெளிவரும்போதுஉடலின் வெப்பநிலையும் ஏறி இறங்க தான் செய்யும். அவர்கள் விளையாடுகிற இடத்தையும் காலநிலையையும் கொண்டு பார்த்தால் வெற்றி வாய்ப்பை
நிர்ணயிக்கக்கூடிய காரணியாக அதுஅமையும். இந்திய வீரர்கள் பல்வேறு சீதோசன நிலைக்கு தங்களை
ஈடுபடுத்த முடியாமல் தோல்வி கண்ட வரலாறு உங்களுக்கு தெரியும். அதைப்போலவே இந்தியாவின்
வெயில் தாக்குப் பிடிக்காமல் இங்கிலாந்து க்ரிக்கெட்அணி தோல்வியுற்றதும் உங்களுக்கு
தெரியும் .இதையெல்லாம் எப்படி சரி செய்ய முடியும்? வெற்றி ஒன்றுதானே இலக்கு? அதற்குத்தான் நைக்கி ஒரு
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது .அந்த தொழில்நுட்பம் விளையாட்டு
வீரனின் உடல்வெப்பம் அதிகமாகும் பொழுது அவன் அணிந்திருக்கிற ஆடையில் நெய்யப்பட்ட நூல்
அதை உணர்ந்து தானாகவே விரிந்து, அவன் உடல் வெப்பத்தை வெளியேற்றி ,வெளிக்காற்றை உள்வாங்கி,
அவன் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது .நினைத்துப் பார்க்க முடியுமா இந்த தொழில்நுட்பத்தை
இந்தியாவில் இன்று?
வெற்றிக்கு வழி என்ன என்று திருப்பூர் எப்பொழுது தெரிந்து
கொள்ளும்?
இப்போது ஒரு சில எளிமையான தொழில் நுட்பங்களைப் பார்ப்போமா?
நாகரீக மனிதன், கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடுகிற,
ஓய்வில்லாத, 24 மணி நேரமும் வேலை செய்துகொண்டு இருக்கிற, ஒரு பிராணி.சாதிக்க வேண்டும், புகழ் ஈட்ட வேண்டும், அதனால் பொருளீட்ட வேண்டும் என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருக்கிற
மனிதனுக்கு, தன்னுடைய ஆடைகள் கசங்கி இருந்தால் பிடிக்காது. .அதேநேரம் முதல் நாள் அணிந்த
ஆடைகளை அடுத்தநாள் அணிவதற்கு சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். காரணம் அவனுக்கு
சுருக்கை நீக்குவதற்கு இஸ்திரி போடுவதற்கு கூட நேரம் இருக்காது. இதை தெரிந்து கொண்ட
ஒரு சில நிறுவனங்கள் இவன் இந்த பணிக்காக ஒரு
குறிப்பிட்ட அளவு செலவு செய்யத் தயங்க மாட்டான் என்பதை புரிந்து ஆடைகள் தயாரிப்பதற்கு
முன்பு அந்த துணிகளில் ஒரு வேதியியல் பொருளை பாவி விட்டு( Chemically treated) துணிகளை சுருக்கமில்லாத துணிகளாய்
( Wrinkle free) மாற்றினார்கள். இன்றைக்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து
இப்படிப்பட்ட ஆடைகளை தயாரிப்பவர்களுக்கு புகழையும் பணத்தையும் தந்திருக்கிறது. இந்த
தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படவில்லை
என்பது வருத்தமே.
அதைப்போன்றே அப்படி
வெளியில் சுற்றுகிற மனிதன் பல்வேறு இடங்களில் பல்வேறு தொற்றுக்களை நுண்ணுயிர் கிருமி(
Bacterial, Virus) மூலம் பெறுகிறான். அதனால் அவனுக்கு பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புண்டு.
அதை தவிர்க்க (Anti microbial) நுண்ணுயிர் கிருமி எதிர்ப்பு,நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு
சக்தி கொண்ட பல்வேறு வேதியல் பொருள்கள் கொண்டு
தயாரிக்கப்பட்ட துணிகளை தயாரிக்க, அது சந்தையில் சக்கை போடு போடுகிறது..
இதைப்போன்றே கறைபடாத ( Stain repellant, Water
resistant) தண்ணீர் ஒட்டாத துணிகளுக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அப்படியே கறை பட்டாலும்,
அப்படிப்பட்ட கறைகளை எளிதில் நீக்கக்கூடிய
ரசாயனங்களை கொண்டு பதப்படுத்தப்பட்ட துணிகளுக்கும் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது..
அதைப்போலவே நைலான் ( Nylon) இழையை விடவும் ஒரு சிறந்த இழை
) சொரோனா இழை.( Sorona from Dupont)
http://sorona.com/
இதை சைனாவில் அவர்கள் எப்படி வெற்றிகரமாக பயன்படுத்தினார்கள்
என்பதை பற்றி அறிந்தபிறகும்,திருப்பூர் ஏன் அதை நோக்கி இன்னும் நகரவில்லை?
Covid-19 சபிக்கப்பட்ட சாத்தானின் சாபமா அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட
தேவதைகளின் வரமா என்பதை திருப்பூர் முடிவு செய்ய வேண்டும்..செய்வார்களா?? .
M.M.Sampath Kumar .
P 2 Clothing Company
#08,Narayanasamy Nagar, Gandhi Nagar PO
Tirupur..India ..641 603
email. sam@p2clothing.in
skype..sam47401..
Ph ; +91 989
473 6388
Twitter..@sam4740
Blog. https://yuvrajsampath.blogspot.com/