நானும்
கேட்டுக் கேட்டு சலித்து விட்டேன் தோழா
அவன்
ஒன்றும் வழிகாட்டுவதாக காணோம்
இம்முறை
நாமே ஒரு முடிவு செய்யலாமா?
நல்வழி
காட்டுகிற பாதையையை மட்டும் விட்டுவிட்டு
மற்றவற்றை
தகர்த்து விடலாமா ?
சத்தியம்
பேசுகிற நாவை மட்டும் பேச விட்டு
மற்றவற்றை
அறுத்துவிடலாமா?
கொடுக்கிற
கையை கொடுக்கச் சொல்லி
எடுக்குற
கையை என்ன செய்யலாம்?
பொசுக்கலாம்.
வேறு
என்னதான் செய்யலாம்?
ஆனாலும்
ஏதேனும்
ஒன்றை செய்ய வேண்டுமே
இந்த
தேசம் உருப்பட
வருங்கால
சந்ததி வாய்மூடி
மௌனியாக
இருக்க வேண்டி
ஏற்றத்தாழ்வுகளை
ஏடுகளில் நுழைத்து
மகாத்மா
எந்த மதத்தை சேர்ந்தவர்
பாரதி
எந்த சாதி என்ற கேள்வி
பதில்
நம்
சந்ததியின் பாடப்புத்தகத்தில் வருமுன்
ஏதேனும்
ஒன்றை செய்ய வேண்டுமே..
இந்த
தேசம் உருப்பட..
என்ன
செய்யலாம்??
No comments:
Post a Comment