Monday, July 27, 2020

பொய் வண்ணம்..27... ஆண்டி


ஆண்டி நான் அரசியல் பிழைக்கப்போய்
வாரியத்தலைவர் ஆனேன்..
ஆளுயர மாலைகள்
அலங்கார வளைவுகள்
ஊர் திரண்டு ஊர்வலம்
மாலைகளில் சுகங்களில்
நனைந்து போக மறுத்தது
ஏழை மனது..
வியர்வையை நுகர
ஏங்கியது நாசி ..

வட்டத் தலைவர் வந்தார் வாழ்த்தியபடியே
மனுவை நீட்டினார் -கூடவே மனத்தையும்
 வாங்க மறுத்த கரத்தை பிடித்து இழுத்து
மனுவைத் திணித்து-மடியினயும் திறந்தார்..

வியாபாரி வந்தார் -விழுந்தார்
நெடுஞ்சாண்கிடையாக.
தலை அறுக்கப்பட்ட தமிழ் துரோகி போல
நான்கு சுவர்களுக்குள்
தன்மானத்தை இழந்து..

அக்கம்பக்கத்தினர் வந்தனர்
ஆளுக்கு ஒரு கோரிக்கை
நல்ல காலம்வந்தது என்றனர்
பூட்டிய கதவுக்குள் மனதை திறந்தனர்

அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டு
 மனைவி மக்களை சுகப்படுத்தி
வாசலுக்கு வந்தேன்..
பூக்காரக் கிழவி..

இரண்டு முறுக்குடனும்
ஒரு கூடை அன்புடனும்

விழுந்து வணங்கினேன்
எதிர்பார்ப்பும் இல்லை
எனக்கு..
ஏமாற்றம் இல்லை
அவளுக்கு.
மாலைகள் தரா மகிழ்ச்சியை
அவள் பொக்கைவாய் நுனி
வெற்றிலை எச்சில் தந்ததால்..

No comments:

Post a Comment