Monday, July 27, 2020

பொய் வண்ணம்...25.. காத்திருப்பு....

அவர்கள் காத்திருக்கிறார்கள் நமக்காக
நாம் என்ன செய்யப்போகிறோம்?
கருப்பு இருட்டை கிழித்துக் கொண்டு
மானுடத்தை தட்டியெழுப்ப
சூரியக்கதிர்களாய்.

அறியாமை மயக்கத்தில் கிடக்கும்
உடலையும் உணர்வையும்
ஒலியெழுப்பி,நம்மை எழுப்ப
சேவல்களாய்..

முடை நாற்றமெடுக்கும்
மூட நம்பிக்கைகளால்
உணர்வு இழந்த நாசிகளுக்கு
புத்துணர்வு ஊட்ட
காலை மகரந்தங்களாய்..

பழமை வாதங்களைக் கேட்டு கேட்டு
செவிடாகி போன காதுகளுக்குள்
புதுராகம் பாட
சோலைக்குயில்களாய்..

இத்தனைக்கும் கேளாத காதாய்
பேசாத வாயாய்
இமைக்காத விழியாய் இருக்கிற
ஜனங்களை தட்டி எழுப்ப
கோவில் மணியாய்
தேவாரமாய்
அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்காக..

நாம் என்ன
செய்யப்போகிறோம்
அவர்களுக்காக??

No comments:

Post a Comment