வல்லூறுகளுடன்
வட்டமிட
நினைப்பவன்
நான்..
வான்கோழிகள்
நட்பு
தேவை
இல்லை எனக்கு..
நெடிதுயர்ந்து
மேகத்தை
பிளப்பவன்
நான்
ஈரத்
தரை பாசியின்
தோழமை
எனக்கெதற்கு?
அகண்ட
பிரபஞ்சத்தை
வளைத்து
பிடிப்பேன் என் விரல்களால்.
கரையோரத்து
நாணல் அல்ல நான்.
கூண்டுக்கிளி
என்றா நினைத்தீர்கள் ?
நான்
பறந்து திரியும் வானம்பாடி
சின்ன
சிறைக்குள்ளே அடைத்து
வேடிக்கை
பார்க்க நினைக்காதீர்
என்னை.
நான்
காற்று
எங்கும்
எப்படியும் புகுந்து
வியாபித்திருப்பேன்
நான்
தென்றல்
என்னை
தீண்டாத வரை ...
புறப்பட்டால்
புயல்
அந்தி
மாலை சூரிய ரேகையும் நானே
ஆலமர
கிளையும் நானே
நானே
நான்
நான்
தான்
நான்...
No comments:
Post a Comment